» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2பேர் கைது - கடைகளுக்கு சீல்..!

சனி 27, ஏப்ரல் 2024 5:03:35 PM (IST)



தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் போலீசார் இன்று (27.04.2024) தோப்பு வடக்கு தெருவில் உள்ள தூத்துக்குடி பொன்னான்டி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பசாமி (54) என்பவருக்;கு சொந்தமான மளிகைகடையில் சோதனை செய்தபோது, அங்கு கருப்பசாமி அவரது கடையில் 12 (150 கிராம்) புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
 
அதேபோன்று நேற்று போலீசார் முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சாலை பகுதியில் உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகரை சேர்ந்த கோமதிவேல் மகன் முருகன் (50) என்பவருக்கு சொந்தமான மளிகைகடையில் சோதனை செய்தபோது, அங்கு மேற்படி முருகன் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,220 மதிப்புள்ள 4 கிலோ 150 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இன்று மேற்படி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 மளிகைகடைகளுக்கும் சீல் வைத்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனை செய்பவர்கள் கடையை மூடி சீல் வைத்து, அவர்களது வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory