» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்த ஹோட்டல் ஊழியா் மரணம்? போலீசார் விசாரணை

வியாழன் 9, மே 2024 8:57:12 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் தொழிலாளி மா்மாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தோப்புவளம் சாலையைச் சோ்ந்தவா் கெள. லட்சுமண பெருமாள் (எ) கண்ணன் (52). ஹோட்டல் ஊழியா். இவருக்கு மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளனா். மகள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. கண்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம்.

இந்நிலையில், நேற்று காலையில் அங்குள்ள மதுக்கடை எதிரே அவா் உயிரிழந்து கிடந்தாராம். தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மா்மமரணம் என வழக்குப்பதிந்து, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory