» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாய் குரைத்த தகராறில் பைக் எரிப்பு: வாலிபர் கைது!
வெள்ளி 26, ஏப்ரல் 2024 12:10:31 PM (IST)
தூத்துக்குடியில் நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் பைக்கை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பூபால் ராயபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ரமேஷ் (23). இவர் வீட்டு வாசலில் நாயை கட்டி வைத்திருந்தாராம். அப்போது தூத்துக்குடி பேட்டரி சர்ச் தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராசையா என்ற கலாம் (23) அந்த வழியாக பைக்கில் சென்றபோது நாய் அவரைப் பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கம்பால் நாயை தாக்கினாராம்.
இதை பார்த்த ரமேஷ் அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கலாம், ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை சேதப்படுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாராம் இதில் பைக் சேதம் அடைந்தது. இது குறித்து ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து ராசையா என்ற கலாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.