» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் பேட்டரி கார் வழங்கல்!

திங்கள் 6, மே 2024 4:08:13 PM (IST)



நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் எளிய மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நாலுமாவடி கிளை சார்பில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களை அழைத்து செல்ல உதவியாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. 

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் மண்டல துணை மேலாளர் பாலமுருகன் பேட்டரி காரின் சாவியை வழங்கினார். இதில் டிஎம்பி தலைமை மேலாளர் (மார்க்கெட்டிங்) இளங்கோவன், நாலுமாவடி கிளை மேலாளர் மேகநாதன், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் அறங்காவலர்கள் டாக்டர் அன்புராஜன், செல்வின், மருதநாயகம், மருத்துவ அதிகாரிகள் விமல், கிப்ட்நார்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்களும், புதுவாழ்வு சங்க குழுவினரும் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory