» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியிடம் 14 கிராம் தங்க செயின் பறித்தவர் கைது

வெள்ளி 26, ஏப்ரல் 2024 10:54:04 AM (IST)

கோவில்பட்டியில் சிறுமியிடம் 14 கிராம் தங்க செயின் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் லட்சுமி பிரபா (36). இவரது மகள் ஹரிணி. கடந்த 21ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் லட்சுமி பிரபா தனது மகளுடன் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துச் சென்றுவிட்டார். 

இதுகுறித்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜூவ் நகர் 6வது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்வர் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory