» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

புதன் 24, ஏப்ரல் 2024 3:11:12 PM (IST)




தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவில் இளைஞர் அணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரணை நடந்தது. பின்னர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 

விழாவிற்கு இளைஞர் அணிதலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். விழாவில், அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா, அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி, இளைஞர் அணி நிர்வாகிகள் சக்திவேல், கோபால், ஜெயராம், கிருஷ்ணன், தங்கவேல், மீனாட்சி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory