» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி : நள்ளிரவில் பரபரப்பு

புதன் 24, ஏப்ரல் 2024 10:34:44 AM (IST)

தூத்துக்குடியில் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சிதம்பர நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஷட்டரில் இருந்த 4 பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த கதவை உடைக்க முயன்றுள்ளனர். அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.

இதுகுறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் அனுகிரகா (36) என்பவர் நேற்று தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வடமாநில வாலிபர்கள் போல் தோன்றும் 4 மர்ம நபர்கள் கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory