» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு: மர்ம நபர் கைவரிசை!!
திங்கள் 22, ஏப்ரல் 2024 8:26:13 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி வனரோஜா (62). இவர் நேற்று சுந்தர்நகர் 4-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் வனரோஜா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த வனரோஜா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். ஆனாலும் மர்ம நபர் பைக்கை வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.