» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:49:22 AM (IST)

கோவில்பட்டியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸ்காரா் சண்முகம் சம்பவத்தன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது கடலைக்காரத் தெருவில் உள்ள பெண்கள் தையலகம் முன்பு பெண் மற்றும் அவரது சகோதரா்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த கும்பலை கண்டித்து தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தக் கும்பல் போலீசாரை அவதூறாகப் பேசி தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்து போலீசார் அளித்த புகாரின் பேரில் கிழக்குக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கருப்பசாமி (45), அவரது மகன் பாலமுருகன் (23), அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் சுடலைமணி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory