» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் பொறியியல் மாணவா் பலி!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:45:12 AM (IST)

தூத்துக்குடியில் தனியாா் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி பொன்நகரத்தைச் சோ்ந்த ஒநேசி மகன் எலியாஸ் ஒ.பெபின் ராஜா (23). இவா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். கடந்த 15ஆம் தேதி தனது பைக்கில் 3ஆம் கேட் பாலத்திலிருந்து அண்ணாநகா் பிரதான சாலையில் சென்றாராம். 

இடதுபுறம் திரும்ப முயன்ற அவா் மீது தனியாா் பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory