» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை திட்டியதால் இளைஞர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

வியாழன் 18, ஏப்ரல் 2024 12:10:58 PM (IST)

தூத்துக்குடியில் தந்தை திட்டியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிதாஸ் மகன் செல்வகுமார் (20). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்வகுமார் தாமதமாக வந்ததாக தெரிகிறது. 

இதனால் தந்தை மாரிதாஸ் அவரை சத்தம் போட்டாராம். இதில் மன வேதனை அடைந்த செல்வகுமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory