» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை திட்டியதால் இளைஞர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 18, ஏப்ரல் 2024 12:10:58 PM (IST)
தூத்துக்குடியில் தந்தை திட்டியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிதாஸ் மகன் செல்வகுமார் (20). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்வகுமார் தாமதமாக வந்ததாக தெரிகிறது.
இதனால் தந்தை மாரிதாஸ் அவரை சத்தம் போட்டாராம். இதில் மன வேதனை அடைந்த செல்வகுமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.