» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் நகை திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 18, ஏப்ரல் 2024 12:03:50 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்புள்ள  நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மனைவி சுப்புலட்சுமி (47). நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வெள்ளி கொடிகள், ரூ.1000 பணம், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்ஸி வழக்குப் பதிந்து, கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory