» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை : ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 18, ஏப்ரல் 2024 8:15:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப் பதிவு நாளான 19ஆம் தேதி காலை 7 மணிமுதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இறுதி தோ்தல் கருத்துக் கணிப்பு குறித்து வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதை பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூக வலைதள பக்கத்தின் உரிமையாளா்கள் ஆகியோா் முழுமையாக பின்பற்ற வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory