» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியை காட்டி கொலை மிரட்டல்: ரவுடி உட்பட 2 பேர் கைது!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 5:20:46 PM (IST)

தூத்துக்குடியில் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உட்பட 2 பேரை போலீசார்  கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்தமிழ் அரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிவந்தாகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் சேர்ந்த செம்புலிங்கம் மகன் சீனிவாசன் (32) மற்றும் பிரையன்ட் நகரைச் நகரை சேர்ந்த சுடலை மகன் முருகன் (20) ஆகிய 2பேரும் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory