» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிகள் : எஸ்பி தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

புதன் 17, ஏப்ரல் 2024 3:58:52 PM (IST)



தூத்துக்குடியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

நாளை மறுநாள் (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று (17.04.2024) அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

இதில் மொபைல் பார்ட்டி உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அவர்கள் தேர்தல் பணியின்போது வாக்கு இயந்திரம் வைக்கும் மையங்களில் இருந்து பாதுகாப்பாக வாக்கு இயந்திரத்தை பெற்று வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒப்படைப்பது மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த அறிவுரை கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory