» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி கருணாநிதியை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் வாக்கு சேகரிப்பு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 9:46:02 PM (IST)



தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து  சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். 

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி மாநகர வீதிகளில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை திமுகவை சேர்ந்த டூவிபுரம் சுப்பையா அவர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சூசைமுத்து மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துச்செல்வம் மாநகர அவை தலைவர் மதியழகன்,காமராஜ், சுந்தர் மாவட்ட மகளிரணி செயலாளர் குருவம்மாள் துணைச் செயலாளர்கள் ஜேசுசெல்வி, பொன்மணி,பொன்ராணி,ராசாத்தி, ராணி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களின் கடந்த ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் திமுக அரசின் இரண்டரை ஆண்டுகள் சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory