» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி மாயம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி!

திங்கள் 6, மே 2024 10:49:03 AM (IST)

கோவில்பட்டியில் மனைவி மாயமானதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்து 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வானரமுட்டி ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் மாடசாமி (35). இவரது மனைவி இந்திராணி (30). இந்த தம்பதிக்கு பொன் தர்ஷன் (12), பொன் சரண்யா (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திராணி வீட்டை விட்டு சென்று விட்டார். இதுகுறித்து மாடசாமி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவி மாயமானதால் மனமுடைந்த மாடசாமி தனது 2 குழந்தைகளுகக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து 3பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory