» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:50:51 PM (IST)

சாத்தான்குளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2லட்சத்தை பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ரத்தினராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதில் வேனை மறித்து சோதனை நடத்தினர். அதில் ரூ 1.56 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி தெரியவந்தது. 

விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மகன் முருகன் (28) திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் கோழி தீவணம் வியாபாரம் முடித்து ஊர் திரும்பியுள்ளதும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதே போல் அதில் வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ 51,100 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆலந்தலை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(50) என்பவர் சுமை ஆட்டோவில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று மீன் வியாபாரத்திற்காக சென்று வந்ததும். பணத்திற்கான உரிய. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியான வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை திருப்பி பெற்றுகொள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory