» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும்படை சோதனையில் ரூ.15.69 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல்!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:16:03 PM (IST)



விளாத்திகுளம் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னம ரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் இருப்பது தெரியவந்தது. 

வாகனத்தில் வந்த அந்நிறுவனத்தின் ஊழியரான மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் மகன் ரோவினஸ் ஆரோக்கியசாமி (43) என்பவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் விளாத்திகுளம் அரசு சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory