» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தீக்குளித்து தற்கொலை: உறவினர் கைது

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 10:50:00 AM (IST)

திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் விளை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி காளீஸ்வரி (33). இவர்களது பக்கத்து வீட்டில் வேல்முருகனின் தம்பி ராமர் வசித்து வருகிறார். ராமர் மனைவி தனலட்சுமி (31) என்பவருக்கும் காளீஸ்வரிக்கும்  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 31ம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த காளீஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து தனலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory