» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சனி 24, பிப்ரவரி 2024 5:10:58 PM (IST)



நாசரேத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில்வே நிலையம் அருகில் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமை வகித்தார்.விழாவை முன்னிட்டு ஜெயலலிதா திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரிகிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அதிமுக ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஞானையா, அதிமுக பிரமுகர் பெரியதுரை, மூன்றாவது வார்டு செயலாளர் சரவணன், 12-வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory