» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!

சனி 24, பிப்ரவரி 2024 11:02:24 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு, சாமி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மக்ன தர்ம முனியசாமி (19), முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (23), இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு மது குடிக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில், ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் அவரது நண்பர்கள் 3பேருடன் சென்று, தர்ம முனியசாமியை சரமாரியாக அரிவாளால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ஆனந்தராஜை கைது செய்தார். மேலும் 3 பேரை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory