» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!

செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)



சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் உலக காடுகள் உலக தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாநடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் உலக காடுகள் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூத்த செயல் உதவித்தலைவர் பணியகம்  சீனிவாசன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஆலை வளாகத்திற்குள் நடப்பட்டது. மூத்த மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் குறுங்காடுகள் வளர்ப்பு மற்றும் காடுகளின் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். 

நீர் இன்றி அமையாது உலகு என்பதை வலிறுத்தும் வண்ணமும், முறையாக நீரை பயன்படுத்தும் வழியிலும் விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. அனைவராலும் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழாவில் மூத்த அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறை, மக்கள் தொடர்பு மற்றும் சிவில் துறையினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory