» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடை விழா கால் நாட்டு விழா
புதன் 1, பிப்ரவரி 2023 10:36:33 AM (IST)
தூத்துக்குடி மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் கொடை விழா கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மேலூர் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் வருகிற 7ம் தேதி கொடை விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது. விழாவில் கொடை விழா குழு தலைவர் கீதா செல்வ மாரியப்பன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் இளைஞர் அணி குழு தலைவர் அறிவழகன், செயலாளர் கோபால் சக்திவேல், வழக்கறிஞர் செந்தில்குமரன், மாரிமுத்து, ராமச்சந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.