» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பலத்த காற்றினால் மக்காச்சோள பயிர்கள் சேதம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வியாழன் 1, டிசம்பர் 2022 7:59:01 PM (IST)



கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் பலத்த காற்றினால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில் பலத்த காற்றினால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேதமடைந்த பகுதிகளை கணக்கீடு செய்ய வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜ்,கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர், வட்டாட்சியர், வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory