» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஷப் பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு!
புதன் 8, மே 2024 11:23:20 AM (IST)
சூரங்குடி அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே உள்ள தத்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏட்டையா இவரது மனைவி முத்துமாடத்தி (50). இவர் நேற்று மாலை தனது வீட்டு முன்பு தரையில் படுத்திருந்தாராம். அப்போது அவரை விஷப் பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடேச பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.