» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பவர் கோரிக்கை!
புதன் 8, மே 2024 10:24:15 AM (IST)
சிந்தலக்கரை அருகே பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "மதுரை - தூத்துக்குடி மார்க்கத்தில் எட்டயாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை மார்க்கத்தில் பாசன கண்மாயின் உபரி நீர் செல்லும் ஓடையின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் பக்கவாட்டு சுவரை மட்டும் சீரமைத்து வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ஆனால் அந்த பாலத்துக்கு 100 மீட்டருக்கு முன்பு திடீரென சாலை குறுகலாவதால் வேகமாக வரும் வாகனங்கள் பாலத்தின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. அந்த இடத்தில் தற்போது வரை ஏராளமான விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இந்த பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனந்த்மே 8, 2024 - 11:22:26 AM | Posted IP 162.1*****