» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 30, நவம்பர் 2022 4:10:36 PM (IST)
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தாளமுத்துநகர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மாரி மகன் பாண்டி முனீஸ்வரன் (28) மற்றும் தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த நைனா முகம்மது மகன் மகேஸ்வரன் (24) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.