» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகில் இருந்து கடலில் தவறிவிழுந்து மீனவர் பலி!

புதன் 30, நவம்பர் 2022 11:58:01 AM (IST)

தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர், கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

ராமேஸ்வரம் சங்குமால் காலனியைச் சேர்ந்தவர் தாசன் மகன் பாபு (54), மீனவரான இவர் இன்று காலை தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 15 மீனவர்களுடன் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளார். கரையில் இருந்து 6 கடல் மேல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது படகில் இருந்து நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார்.  

அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தருவைக்குளம் மரைன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory