» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் பள்ளியில் திருட முயன்ற இளைஞா் கைது

புதன் 30, நவம்பர் 2022 8:39:56 AM (IST)

கோவில்பட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரைப் போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி லாயல் மில் காலனியில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ, அங்கிருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களைத் திருடி, பள்ளி வளாகத்திலேயே வைத்துச் சென்றனா். தலைமையாசிரியா் செல்வி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் போலீசார் விசாரணை நடத்தினா்.

இதில் தொடா்புடையதாகக் கூறப்படும் மந்திரமூா்த்தி என்பவரை ஏற்கெனவே கைது செய்திருந்தனா். இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்ட கோவில்பட்டி புதுகிராமம் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த ராஜ் மகன் சூா்யாவை (25) நேற்று கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory