» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

எட்டயபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன். இவரது மகள் முத்தம்மாள் (19), கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர், சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மாடியில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory