» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 3:58:53 PM (IST)
தூத்துக்குடியில் மின்சாரம் கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெரு முருகன். தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள் (47), இன்று காலை 11 மணியளவில் கிரைண்டரில் மாவு அரைத்தபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த முருகன், மனைவி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெய்வானைAug 19, 2022 - 02:58:17 PM | Posted IP 162.1*****