» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:58:53 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெரு முருகன். தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள் (47), இன்று காலை 11 மணியளவில் கிரைண்டரில் மாவு அரைத்தபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்நிலையில், இன்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த முருகன், மனைவி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

தெய்வானைAug 19, 2022 - 02:58:17 PM | Posted IP 162.1*****

முருகனுக்கு வள்ளி கொடுத்து வைக்கலையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory