» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி சார்பில் சுதந்திரப் பெருவிழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:12:27 PM (IST)



தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திரப் பெருவிழா கொண்டாடப்பட்டது.

நாட்டின் 75வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி காரியாலயத்தில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக பொறுப்பாளர் கவி சண்முகம் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இந்து வியாபாரி சங்க மாநிலதலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். 

இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் நாராயணன் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எல்ஆர். சரவணகுமார், பலவேசம், ஹிந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஹிந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்களின் குடும்பங்கள், குழந்தைகள், இந்து இளைஞர் முன்னணியின் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களின் வரலாறுகளை எடுத்து கூறப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory