» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எஸ்டிபிஐ கட்சி சாா்பில் 75வது சுதந்திர தின விழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 12:15:56 PM (IST)
தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் 75வது சுதந்திர தின விழா தொகுதி தலைவா் காதர்உசேன் தலைமையில் நடைபெற்றது. ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் கிளை நிர்வாகி நிஜாம், திரேஷ்புரம் பகுதியில் மீணவரனி மாவட்ட தலைவா் கெளது மைதீன் ஆகியோர் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினாா்கள்.
மாவட்ட செயலாளா் மைதீன்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஷேக் முகைதீன் அலி, தொகுதி இனைச்செயலாளா் மைதீன் பிச்சை, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநகர செயற்குழு உறுப்பினர்கள் முஹைதீன் அப்துல் காதர், ஷேக் மைதீன் மற்றும், பாப்புலா் ஃப்ரண்ட் உறுப்பினா்கள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பலா் கலந்துக்கொண்டனா்.