» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநகராட்சியில் 75வது சுதந்திரதின அமுத பெருவிழா : மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக்கொடி ஏற்றினார்
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 10:10:36 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறும், சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட, தூத்துக்குடி மாநகர் முழுதும் தேசியக்கொடி ஏற்றி விழாக்கோலம் பூண்டுள்ளது. 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா வரவேற்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் 60 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அருண்குமார், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றியுரையாற்றினார். மண்டல அலுவலகங்களிலும் மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஆகியோர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.
தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு கீழுர் கூட்டுறவு வங்கி தலைவர் சி.த.சு ஞான்ராஜ் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலாளர் நியூட்டன் துணைமேலாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.