» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 8ல் வருஷாபிஷேகம்
சனி 2, ஜூலை 2022 8:29:58 AM (IST)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 8ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகிறது.
தொடா்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். காலை 8.30 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
முருகன் அடிமைJul 2, 2022 - 10:05:20 AM | Posted IP 162.1*****