» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை!
சனி 18, ஜூன் 2022 3:41:38 PM (IST)
தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மீறி சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்போர் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதாகைகள் அகற்றப்படும். மேலும், மாநகராட்சி சார்பிலும், அரசு சார்பிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மறைத்து பதாகைகள் வைப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட பாலீத்தீன் பைகள் கழிவுநீர் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே வீசப்படும் பாலீத்தீன் பைகளை கால்நடைகளை சாப்பிடுவதால் அவை உயிரிழக்கும் சூழல் உள்ளது.எனவே, தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் மஞ்சள் பைகள்,பேப்பரால் செய்யப்பட்ட பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
