» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது!

வெள்ளி 20, மே 2022 2:49:21 PM (IST)

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி தேரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், அவர் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகன் கருப்பசாமி (30) என்பதும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 85 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமி மீது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர் காமநாயக்கன் பாளையம், திருப்பூர் தெற்கு ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory