» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஶ்ரீபொன்னுறுதி அம்பாள் கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு

சனி 27, நவம்பர் 2021 3:15:36 PM (IST)



கொங்கராயர்குறிச்சி ஶ்ரீபொன்னுறுதி அம்பாள் கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயர்குறிச்சி ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் சமேத ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. பைரவரின் அவதார தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மஹாதேவ அஷ்டமி அன்று காலை ஶ்ரீ ருத்ர ஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் 64 பைரவர்களின் அம்சமாக விளங்கும் ஶ்ரீ சட்டைநாத சுவாமிக்கும் ஶ்ரீ மஹா ருத்ராபிஷேகம் நடைபெற்றது. 

சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், சட்டைநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சமராராதனை நடைபெற்றது. நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொங்கராயர்குறிச்சி ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் சமேத ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் தேவஸ்தான பூஜா கைங்கர்ய ஸ்தானீகர் குணசேகர பட்டர், சட்டநாத சுவாமி அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory