» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நூதன போராட்டம்
புதன் 28, ஜூலை 2021 5:44:55 PM (IST)
தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதியில் உள்ள 5 தெருக்களில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் சாலையில் நெல் குத்தும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாதர் சங்கம் கமலம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முத்து கலந்து கொண்டு கண்டன உரையாற்றிானர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் நெல் குத்தி மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் விக்னேஷ், கிஷோர், மணி, தாம்சன், இசக்கி, கற்பககனி, காந்திமதி, வினோகலன், பிரேமா, சித்திரைபுஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.