» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மது, புகையிலை விற்பனை: 19பேர் கைது!

புதன் 28, ஜூலை 2021 11:40:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, புகையிலை பாக்கெட் விறப்னை செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், தாளமுத்துநகர் புதியம்புத்தூர், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கழுகுமலை, நாலாட்டின்புதூர், புதூர், மற்றும் தட்டார்மடம் ஆகிய 10 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 148 புகையிலை பாக்கெட்டுகள்  பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மதுவிற்பனை: 7பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி தென்பாகம், முறப்பநாடு, புதுக்கோட்டை, கயத்தார், சங்கரலிங்கபுரம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  ஆகிய 6 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory