» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 22, ஜூன் 2021 3:32:36 PM (IST)
நாசரேத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஏஐடியுசி ஆட்டோ சங்கம் சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கரோனா நிவாரணமாக ஆட்டோ, வேன், ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ. 7500 வழங்ககோாியும், புதிய வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாசரேத்தில் ஏஐடியுசி ஆட்டோ சங்கம் சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் கிருஷ்ணராஐ், எழுத்தாளர் ஆறுமுகப் பெருமாள், கட்டுமானசங்க டேவிட், ஆட்டோ சங்கம் இஸ்ரவேல், சின்னத்துரை, சங்கா், ராஐன்,ஐோசி உட்பட பலா் கலந்து கொண்டனர்.