» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று : 309 போ் குணமடைந்தனர்.
சனி 19, ஜூன் 2021 9:36:02 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தொற்றிலிருந்து 309 போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,435 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 309 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 51,165 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் 2பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 365 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1906 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.