» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வியாபாரியை கொல்ல முயன்ற 7பேர் கைது: ஆயுதங்கள், கார், பைக்குகள் பறிமுதல்

சனி 19, ஜூன் 2021 9:02:29 PM (IST)

தூத்துக்குடியில் வியாபாரியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பயங்கர ஆயுதங்கள், கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி என்ற பொன்பாண்டி (38) என்பவர் அதே பகுதியில் டீக்கடை மற்றும் செருப்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொழில் வளர்ச்சி மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொன்பாண்டி மீது பகை கொண்டு, அவருக்கு தொழில் ரீதியாகவும், பல்வேறு வகைகளிலும் இடையூறு செய்தும், அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று 18.06.2021 அன்று மாலை வாதி டீக்கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வரும்போது 4 பேர் 2 பைக்கில் வந்ததை கவனித்த பொன்பாண்டி வேகமாக வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, பைக்கில் வந்தவர்கள் அவரை வழிமறித்து, கையில் வைத்திருந்த அரிவாளால் சாவுலே என்று ஆபாசமான வார்தையில் பேசிக்கொண்டு கழுத்தை நோக்கி வேகமாக வெட்ட வந்துள்ளார், சுதாரித்துக் கொண்ட ரவி விலகியுள்ளதால் உயிர் தப்பியுள்ளார். 

அப்போது வீட்டிலிருந்த இருந்து அவரது சகோதரர்கள் ஓடி வந்து பார்த்தபோது, தெரு முனையில் ஸ்கார்பியோ காரிலிருந்த இறங்கிய சதீஸ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆகிய இருவரும் அஜித், அலெக்ஸ் ரவியை கொல்ல முடியலன்னா ஓடிடுங்கடா என்றும், அதே நேரம் பொலீரோ காரிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்த ஜோதிராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான ராசுக்குட்டி, மதன், ஜெரின் ஆகியோர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து பொன்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், உதவி ஆய்வாளர் வேல்ராஜ், சங்கர், சிவக்குமார், தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடியதில் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அஜித்குமார் என்ற அஜித் (26), தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் இந்திரநகரைச் சேர்ந்த கண்ணன் மகன் அலெக்ஸ்பாண்டி என்ற அலெக்ஸ் (29) தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தலைவடன்வடலியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (21), தாழையூத்து கட்டாம்புளி ஜெயக்குமார் மகன் ஜெரின் (23), தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதி ராஜா (35), தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முகேஷ் ராஜா என்ற ராசுக்குட்டி (25) மற்றும் தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி சதீஸ் (42) ஆகிய 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 அரிவாள், 3 பைக்குகள் மற்றும் ஒரு ஸ்கார்பியோ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை செய்ய முயன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory