» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணியில் முறைகேடு: அமைச்சரிடம் பொதுமக்கள் முறையீடு!!

சனி 19, ஜூன் 2021 11:22:29 AM (IST)



தூத்துக்குடியில் கழிவு நீர் கால்வாய் பணிகளை முறையாக நடத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளிக்க  பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி கே.வி.கே., நகர் மேற்கு பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கால்வாயின் சிதிலமடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தாமல் பணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் கால்வாய் மிகவும் குறுகி, நீரோட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் முறையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து கால்வாய் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் முறையாக ஆய்வு நடத்தி, பணிகள் தொடரப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory