» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணியில் முறைகேடு: அமைச்சரிடம் பொதுமக்கள் முறையீடு!!
சனி 19, ஜூன் 2021 11:22:29 AM (IST)
தூத்துக்குடியில் கழிவு நீர் கால்வாய் பணிகளை முறையாக நடத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளிக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கே.வி.கே., நகர் மேற்கு பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கால்வாயின் சிதிலமடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தாமல் பணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் கால்வாய் மிகவும் குறுகி, நீரோட்டம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் முறையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து கால்வாய் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் முறையாக ஆய்வு நடத்தி, பணிகள் தொடரப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.