» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

சனி 19, ஜூன் 2021 8:43:18 AM (IST)

கோவில்பட்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த ஆராச்சிபட்டியைச் சோ்ந்தவா் லதா (32). இவா், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பட்டிக்கு நேற்று ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, முடுக்கலாங்குளம் பகுதியில் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த நபா் மறித்து, அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, மணிபா்ஸ் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டாராம். பா்ஸில் ரூ.500, ஏடிஎம் அட்டை மற்றும் குடும்ப அட்டை இருந்ததாம். இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory