» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை
சனி 19, ஜூன் 2021 8:40:10 AM (IST)
ஆத்தூா் அருகே, மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், கட்டட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள முக்காணி பிரதானச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமாா் (44). கட்டடத் தொழிலாளி. இவரது மூத்த மகள் அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அருண்குமாா், சம்பவத்தன்று தனது வீட்டில் கதவை உள்புறம் பூட்டிக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ஆத்தூா் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.