» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை

சனி 19, ஜூன் 2021 8:40:10 AM (IST)

ஆத்தூா் அருகே, மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், கட்டட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள முக்காணி பிரதானச் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமாா் (44). கட்டடத் தொழிலாளி. இவரது மூத்த மகள் அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அருண்குமாா், சம்பவத்தன்று தனது வீட்டில் கதவை உள்புறம் பூட்டிக்கொண்டு சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ஆத்தூா் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory