» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திங்கள் 14, ஜூன் 2021 9:39:14 PM (IST)

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 15)  மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தூத்துக்குடி நகர் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (15ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் அனந்த மட பச்சேரி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், தூத்துக்குடி நகர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட திரேஸ்புரம் உயரழுத்த மின்பாதையில் கம்பிகளின் தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திரேஸ்புரம் பூபாலராயர் புரம். மாணிக்கபுரம். குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்து கிருஷ்ணா புரம். ராமர் விளை ஆகிய பகுதிகளில் காலை  10 மணி முதல் மாலை 12மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory