» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் : சகோ. மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

ஞாயிறு 13, ஜூன் 2021 3:11:22 PM (IST)



தென்திருப்பேரை,  குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு சகோ.மோகன் சி.லாசரஸ் உதவிகள் வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் புது வாழ்வு சங்கத்தின் மூலம் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு 5 லிட்டர் டீசல் மற்றும் ரூபாய் 700 மதிப்பிலான மளிகை பொருட்கள், முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிட்டைசர் அடங்கிய தொகுப்புகளை சகோ. மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் கெயின் வெஸ்லி சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory