» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழை, எளிய மக்களுக்கு அமமுக நிர்வாகி நிவாரண உதவி வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 3:51:02 PM (IST)



தூத்துக்குடியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுக நிர்வாகி நடிகர் காசிலிங்கம் காய்கறி தொகுப்புகளை வழங்கினார். 

தூத்துக்குடியில் 30ஆவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வட்டச் செயலாளர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தக்காளி, பல்லாரி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், வெள்ளைப்பூண்டு, அடங்கிய தொகுப்பு சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். வட்ட பொருளாளர் சுப்பையா, வட்ட நிர்வாகிகள் ராமர், சபிக், செம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory